சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகை ரோஜா அனுமதி!
ஆந்திர மாநிலத்தின் அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் ஆர்.கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்தது தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானர். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 90களில் சினிமா ரசிகர்களின் கனவுக் கண்ணியாக மாறினார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, நகரி தொகுதியில் 2014ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார். மேலும் படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என அவருக்கு பல்வேறு அவதாரங்கள் உண்டு.
இந்நிலையில், அமைச்சர் ரோஜா செல்வமணி (வயது -50), நேற்று இரவு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.