பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்- ஜெய்சங்கர் திட்டவட்டம்!

MEA Jaishankar
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
Published on

பாகிஸ்தானுடனான ஆயுத மோதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முறைப்படி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். 

”இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு துப்பாக்கிச் சூடு, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது என ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். ” என்று அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்துக்கும் அதன் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் எதிராக சமரசமற்ற நிலையினை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது. இதில் இனியும் எந்த மாற்றமும் இருக்காது.” என்றும் வெளியுறவு அமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com