அல் உம்மா பாஷா
அல் உம்மா பாஷா

கோவை குண்டுவெடிப்பு வழக்கு - அல் உம்மா பாஷாவுக்கு ஜாமின்!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியமாகக் குற்றம்சாட்டப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷாவுக்கு பிணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கடந்த 1998ஆம் ஆண்டில் நிகழ்ந்த கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், பாஷா கோவை மையச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்.

தன் 29 ஆண்டுகால சிறைவாசத்தில் 85 வயதில் மூப்பு காரணமாகவும் பிற உடல் உபாதைகளாலும் அவதிப்படும் அவரை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் எனக் கோரி, அவரின் மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

மேலும், இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பாஷாவுக்கு இடைக்காலமாக பிணைய விடுதலை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வு, மூன்று மாதங்களுக்கு இடைக்காலப் பிணைய விடுதலை வழங்கி உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com