சுப.வீரபாண்டியன், பெ.சண்முகத்துக்கு தமிழக அரசின் சமூகநீதி விருது!

சுப.வீரபாண்டியன், பெ.சண்முகத்துக்கு தமிழக அரசின் சமூகநீதி விருது!

சமூக நீதிச் செயல்பாடுகளுக்காக மாநில அரசால் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான பெரியார், அம்பேத்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தந்தை பெரியார் விருது சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திராவிடவியல் பேச்சாளருமான சுப.வீரபாண்டியன், டாக்டர் அம்பேத்கார் விருது மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இந்த விருதுகளை வழங்குகிறார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com