தி.மு.க. இளைஞரணி மாநாடு தள்ளிவைப்பு- 24ஆம் தேதி நடைபெறும்!

தி.மு.க. இளைஞரணி மாநாடு தள்ளிவைப்பு- 24ஆம் தேதி நடைபெறும்!

சேலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க. இளைஞரணியின் மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைமைக்கழகம் சார்பில் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

“ "மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை - வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வரும் 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும்.” என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com