தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 10ஆம் தேதி வெளியீடு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ஆம்தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

அன்று காலை 9.30 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வளாகத்தில் முடிவு வெளியிடப்படும். 

அதே நேரத்தில்,

www.tnresults.nic.in,

www.dge.tn.gov.in

https://results.digilocker.gov.in/

ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com