(மாதிரிப் படம்)
சிறுமி மீது பாலின வன்கொடுமை

17 வயது சிறுமி மீது பாலின வன்கொடுமை - திருப்பூரில் 9 பேர் கைது!

திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் மீது 9 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலின வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் வெளியே வந்துள்ளது. 

பாலின வன்கொடுமையால் சிறுமி கருவுற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு உறவினர்கள் அறிந்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின்படி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். 

இதில் மூன்று சிறுவர்கள் உட்பட 9 ஆண்கள் கைதுசெய்யப்பட்டனர்.  

சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கும் மற்ற 6 பேரும் சிறைக்கும் அனுப்பப்பட்டனர். 

இந்த சம்பவத்தால் இந்தப் பகுதிவாசிகள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துபோயுள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com