தூத்துக்குடி வெள்ளம்
தூத்துக்குடி வெள்ளம்

21ஆம் தேதிதான் முதல்வர் தூத்துக்குடி போகிறார்- மையக் குழு வருகையால் மாற்றம்!

மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் நாளை ஆய்வு செய்யவுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளைமறுதினம் தூத்துக்குடிக்குச் செல்கிறார் என  தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அரசுச் செய்திக்குறிப்பு விவரம்:

“தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்தார். மத்தியக் குழு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில்கொண்டு, அவர் நாளை இரவு மதுரைக்குச் சென்று அடுத்த நாள் (21.12.2023) தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com