புதிய தோற்றத்தில் நடிகர் அஜித் குமார் 
சினிமா

‘என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது’ – அஜித் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன்

Staff Writer

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்வீட் செய்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63ஆவது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் மற்றொரு படமான 'விடாமுயற்சி' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.

இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எனக்கு இப்படியான வாழ்நாள் வாய்ப்பைக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ அஜித் சார். இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக எனக்கு அமைந்தது.'' எனப் பதிவிட்டிருக்கிறார்.