இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - முந்நீர்

Staff Writer

இன்று ஒரு சொல் - முந்நீர்

பொருள் : கடல், ஆழி

ஆற்று நீர், கடலின் கீழ்ப் பரப்பில் இயற்கையாக ஊற்றுகளிலிருந்து உருவாகும் நீர், மழை நீர் ஆகிய மூன்று வழிகளில் உருவானது என்பதால், இப்பெயர் பெற்றது. 

இலக்கியத்தில் : 

முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை

- தொல்காப்பியம்

முழங்குமுந்நீர் முழுவதும் வளைஇப் 

பரந்து பட்ட வியன் ஞாலம்

- புறநானூறு