''முதல்வருக்கு ஆணவம் நல்லது அல்ல'' என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், கடந்த 6ஆம் தேதி கூடியது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் உரையை வாசிக்காமல் அவை தொடங்கிய 3 நிமிடங்களிலேயே புறப்பட்டுச் சென்றார். ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ' தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழக சட்டசபையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?' என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!' என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தள கணக்கில் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் 'அபத்தமானது' மற்றும் 'சிறுபிள்ளைத்தனமானது' என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல.
பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்.” இவ்வாறு அந்த அறிக்கையில் ஆளுநர் கூறியுள்ளார்.