தங்கம் (மாதிரிப்படம்) 
வணிகம்

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.9,520 உயர்வு!

Staff Writer

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வரும் நிலையில், புதன்கிழமை மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 5,200 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. ஒரு கிராம் ரூ. 15,610-க்கும், ஒரு சவரன் ரூ. 1,24,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை பேரதிர்ச்சி அளிக்கும் வகையில், தங்கம் சவரனுக்கு ரூ. 9,520 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 16,200-க்கும், ஒரு சவரன் ரூ. 1,34,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 14,720 அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே வெள்ளியின் விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ. 13 உயர்ந்த நிலையில், இன்று ரூ. 25 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 425 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 4.25 லட்சமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.