மழை 
செய்திகள்

2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்!

Staff Writer

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, விருதுநகர், குமரி, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 5ஆம் தேதி, கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.