அன்புமணி  
செய்திகள்

‘தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை’ – பா.ஜ.க.வை விமர்சிக்கும் அன்புமணி

Staff Writer

'மொழி அரசியல் செய்யக்கூடாது. இது தவறானது. தமிழகத்தின் கொள்கையை மாற்ற சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது' என பா.ம.க. தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் செய்தியாளரை சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில், வரும் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கிறது. அதில், தமிழ்நாட்டுக்கு மக்களை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்க மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் படி, மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு தொகுதி அடிப்படையில் மக்களவை தொகுதி அதிகரிக்கப்படும் என்று ஒரு செய்தி இருக்கிறது. இந்த செய்தி இன்னும் உறுதியாக இல்லை. இது ஒரு தவறான போக்கு. தமிழகத்தின் உரிமைகளை இழக்கக் கூடாது. தமிழ்நாட்டுக்கும் மற்ற வளர்ந்த மாநிலங்களுக்கும் இதை தண்டனையாகப் பார்க்கின்றோம்.

இந்தியாவின் கொள்கை மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்பது தான். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மார்ச் 5ஆம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்கும்.

புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு நிதி கொடுப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி வருகிறார். இது ஒரு தவறான போக்கு. எந்த மாநிலத்திலும் மத்திய கொள்கையைத் திணிக்கக் கூடாது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் ஏற்பதும், மறுப்பதும் மாநில அரசு உரிமை.

நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது. தமிழகத்தில் 60 ஆண்டுகளாக இருமொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம், ஆனால் திணிக்கக் கூடாது. மொழி அரசியல் செய்யக்கூடாது. இது தவறானது. தமிழகத்தின் கொள்கையை மாற்ற சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.

தமிழுக்காக தி.மு.க. என்ன செய்துள்ளது? நீங்கள் மொழிப்போர் வைத்து தான் ஆட்சிக்கு வந்தீர்கள். நீங்கள் அரசு பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். கல்வியை வியாபாரம் ஆக்கியது தி.மு.க.தான்.” இவ்வாறு அன்புமணி கூறினார்.