முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

"வக்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்

Staff Writer

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது கண்டனத்திற்குரியது. ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல். 232 பேர் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக வாக்களித்தது சாதாரணமானது அல்ல. பெரும்பாலான கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்டத்தை நிறைவேற்றியது அரசமைப்பு மீதான தாக்குதல். வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமைக்காக தமிழ்நாடு என்றும் போராடும். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடரும்.” என்றா.