தங்கம் விலை (மாதிரிப்படம்) 
செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

Staff Writer

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அதன் எதிரொலியாக, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,920க்கு விற்பனை செய்யப்பட்டது.

பிப்ரவரி 15ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. ஒரு கிராம் ரூ.7,890க்கும், ஒரு சவரன் ரூ.63,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.63,520க்கும், ஒரு கிராம் ரூ.7,940க்கும் விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.