சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ. 240 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 60,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ரூ. 48,698-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இந்த ஆண்டு ஜனவரி ஜனவரி1ஆம் தேதியன்று 58,916 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜனவரி 22ஆம் தேதி 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. ஒரு கிராம் 30 ரூபாய் உயர்ந்து 7,555 ரூபாய்க்கும், ஒரு சவரன் 60,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சர்வதேச முதலீட்டார்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், அதன் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம்.