துரை வைகோ - மல்லை சத்யா 
செய்திகள்

‘வைகோவின் சேனாதிபதி நான்’- மல்லை சத்யா பதிவும், துரை வைகோ எதிர்வினையும்

Staff Writer

தன்னை வைகோவின் சேனாதிபதி என கூறியுள்ளார் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு துரை வைகோ எதிர்வினையாற்றியுள்ளார்.

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்தின் உச்சக் கட்டமாக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமாகவே விலகி இருக்கிறார் துரை வைகோ. கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மல்லை சத்யா வெளியிட்டுள்ள பதிவில்:

“இனியத் தோழமைகளே, இலங்கை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை கண்டு தான் ராமனின் தூதுவன் என்பதற்கு சாட்சியாக ராமன் சீதை திருமணத்தின்போது அணிவித்த மோதிரத்தை காட்டி தன் நிலையை உறுதிப் படுத்துவான் சொல்லின் செல்வன் அனுமன்.

அதைப் போன்றே நான் தலைவர் வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் என் மோதிர விரலில் தலைவர் வைகோ எம்.பி முகம் பதித்த மோதிரம், சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம் இதுதான் என் அடையாளம்” என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிலுக்கு எதிர்வினையாற்றியுள்ள துரை வைகோ, “மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது. ம.தி.மு.க.வுக்காகவும், வைகோவுக்காகவும் உழைத்த தொண்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்று கூறினார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.” என்று கூறினார்.