அன்புமணி  
செய்திகள்

“பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து வெட்டி விட்டிருவேன்” – அன்புமணி ஆவேசம்

Staff Writer

தான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து வெட்டி விட்டிருவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக பேசியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆர்.கே.பேட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருத்தணிக்கு வந்தார். திருத்தணி ரயில் நிலையம் அருகே கட்சிக்கொடி ஏற்றி வைத்து அவர் பேசும்போது, “தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது. பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது. 5 வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை, 8 பேர் சேர்ந்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். நம்ம ஊர் இப்படி நடப்பதை விட முடியுமா? இந்த குற்றச்செயலில் ஈடுபடுகின்றவர்களுக்கு பயம் இல்லை.

நான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை வேறு மாதிரி செய்திருப்பேன். புடிச்சு வெட்டி விட்டுருவேன். அதன் பிறகு யாராவது இப்படி செய்வார்களா? அப்போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பயம் இருக்கும்” என்றார்.