இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. 
இந்தியா

மகளிர் டி20 உலகக்கோப்பை... இந்திய அணியின் பயணத்திற்கு முடிவு கட்டியது ஆஸ்திரேலியா!

Staff Writer

நேற்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பைப்  போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 56 ரன்களுடன் அரை சதத்தைத் தாண்டி ரன் குவித்தார். மேலும், இந்திய அணியின்  ஸ்மிருதி மந்தனா (38), ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை இந்தியா எடுத்தது.

171 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் எலிஸ் பெர்ரி 56 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் குவித்து, தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் ஆஸ்திரேலியா அனைத்து போட்டிகளிலும் வென்று முதலிடத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்தியா 170 ரன்கள் எடுத்தும் வெற்றியைத் தக்கவைக்க முடியாமல் உலகக் கோப்பை பயணத்தை முடித்துக்கொண்டது

நேற்றையப் போட்டியில் வலுவான இலக்கை நிர்ணயித்த இந்தியா, பந்துவீச்சு, களவியூகத்தை இறுதி ஓவர்களில் திறம்பட செயல்படுத்தத் தவறியது. எலிஸ் பெர்ரி – ஆஷ் கார்ட்னர் கூட்டணியை ஆரம்பத்திலேயே பிரிக்க இந்திய அணியால் முடியவில்லை.

பந்துவீச்சாளர்களின் மாற்றம், இறுதி ஓவர்களுக்கான திட்டமிடல் ஆகியவற்றில் ஆஸ்திரேலியா அணி சிறப்பாகச் செயல்பட்டது.

போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் "சிறந்த அணிக்கு எதிராக, எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை; இந்த தோல்வியில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram