மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களைக் கைப்பற்ற முயன்றதாக அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த காப்பறைகளில் இரண்டு அறைகளுக்கான மின்சாரம்துண்டிக்கப்பட்டு அங்கு மத்திய படைகள் குற்றவாளிகளைக் கூட்டிச்சென்று கைப்பற்ற முயன்றதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் தேர்தல் ஆணையம் இதை மறுத்துள்ளது.