முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 
இந்தியா

‘இரண்டு வருஷம்... ஒரு வருத்தம் கூட மோடி தெரிவிக்கவில்லை..’ - ப. சிதம்பரம் விமர்சனம்!

Staff Writer

நேற்று மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி, ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் ஊடகப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“2023ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த கலவரத்தில், 258 பேர் உயிரிழந்தனர், 1,108 பேர் காயமடைந்தனர், 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன, 60,000 பேர் இடம் பெயர்ந்தனர், பல்லாயிரம் பேர் அகதிகள் முகாம்களில் இன்றும் இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நேற்று மணிப்பூர் சென்ற மோடி அவர்கள் ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை, இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை. ரூ 7,300 கோடி திட்டங்கள், ரூ 1,200 கோடி திட்டங்கள் என்று மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.