ஷிஹாப் சித்தூர்
ஷிஹாப் சித்தூர் 
செய்திகள்

கேரளா – மக்கா: கேரள இளைஞரின் 8,640 கி.மீ., தூர பயணம்!

Staff Writer

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியைச் சேர்ந்தவர், ஷிஹாப் சித்தூர். இவர், இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மக்காவிற்கு கேரளாவிலிருந்து நடந்தே சென்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி தொடங்கிய அவரது பயணம் தற்போது நிறைவுபெற்றுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் ஷிஹாப், தன்னுடைய பயணம் குறித்த காணொளிப் பதிவுகளை அதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கேரளாவிலிருந்து மக்காவிற்கு நடைப்பயணம் மேற்கொண்ட காணொளியையும் அதில் வெளியிட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.

இந்திய மாநில எல்லைகளைக் கடந்து, இறுதியாக வாகா எல்லைக்குள் நுழைந்தபோது, விசா இல்லாததால் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், அந்த போக்குவரத்து விசாவைப் பெறுவதற்காக வாகாவில் உள்ள ஒரு பள்ளியில் பல மாதங்கள் காத்திருந்துள்ளார்.

இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம், ஷிஹாப் ட்ரான்ஸிட் விசாவைப் பெற்று பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். சிறிது இடைவெளிக்குப் பிறகு ஈரான், ஈராக், குவைத் நாடுகள் வழியாக தற்போது மக்காவை அடைந்துள்ளார்.

மதீனாவிற்கும் மக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ தூரத்தை ஷிஹாப் 9 நாட்களில் கடந்துள்ளார்.

மக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப்பின் சிறு வயது கனவு என்றும், இதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்தே சென்றதாகவும் கூறப்படுகிறது. 8,640 கி.மீ தூரம் பயணத்தைக் கடக்க, அவர் 370 நாட்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மக்காவுக்கு நடந்தே சென்ற சாதனைப் பட்டியலிலும் ஷிஹாப் இடம்பிடித்துள்ளார்.