ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
இதில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
குத்துச்சண்டைப் போட்டியில், வேறு எந்த நாடும் பெற்றிராத அதிகப் பதக்கங்களாக 7 தங்கப் பதக்கத்துடன் மொத்தம் 10 பதக்கங்களை, இந்த ஒரு விளையாட்டில் மட்டும் இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.
ஜூடோவில், அஸ்மிதா டே, அபாரமாக விளையாடி காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் ஜூடோ சாம்பியன் ஆனார்.
இதேபோல், தடகளப் போட்டி வீரர் குல்வீர் சிங், இரண்டு தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் ஆண்களுக்கான 10000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
காமன்வெல்த் போட்டிகளில், இந்தியாவின் முதல் டெகாத்லான் வீரர் என்ற சாதனையை தேஜஷ்வின் சங்கர் படைத்துள்ளார்.
இந்தப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 122 இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
ஆஸ்திரேலியா 171 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.