செய்திகள்

திடீரென துணிக்கடையில் பற்றிய தீ… போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

Staff Writer

சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர்.

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளிக்கிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீ -யை போராடி அணைத்தனர்.

ஷோபா துணிக்கடைக்கு அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீ விபத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது பற்றி தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.