தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, மக்கள் மத்தியில், முதலமைச்சர் ஸ்டாலின் பொய் பேசி வருவதாக மத்திய உள்துறை அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
கோவை பீளமேட்டில் இன்று காலை பா.ஜ.க. கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமித்ஷா பேசியதாவது:
"தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும். தொகுதி குறைய வாய்ப்பு இல்லை.
பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. நான் இங்கு உண்மையைக் கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.” இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.