சட்டத் தொகுப்புகளைக் கண்டித்து சென்னையில் மறியல் 
தமிழ் நாடு

4 சட்டத்தொகுப்புகள்... சென்னையில் போராட்டம்!

Staff Writer

நான்குதொழிலாளர் சட்டத்தொகுப்புகளை இரத்துசெய்யக் கோரி பத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதை முன்னிட்டு சென்னையில் கிண்டி அஞ்சலகம் முன்பு சி.ஐ.டி.யு. அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

வடசென்னை, விம்கோ நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் இருப்புப்பாதையில் அமர்ந்து தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

விம்கோ நகர் மறியல்