ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். சாலைவலமாக வந்து அவர் வாக்கு சேகரித்தார்.
இதைப் போல, த.வெ.க. தலைவர் விஜய்யும் இன்று பிற்பகலில் வில்லிவாக்கம் பகுதியில் சாலைவலமாக வந்து வாக்கு சேகரித்தார். அவரின் வாகன வரிசையின் பின்னாலும் சுற்றியும் ஏராளமான இரசிகர்கள் திரண்டதால், அந்த வட்டாரமே போக்குவரத்து நெரிசலால் திணறியது.
தொடர்ந்து வாகனத்திலேயே அவர் விருகம்பாக்கம் பகுதிக்குச் சென்று, அங்கும் வலம் வந்து வாக்கு சேகரித்தார். அப்போதும் சாலைகளில் மக்கள் திணறிப்போனார்கள்.