இயக்குநர் ஜெயபாரதி 
தமிழ் நாடு

இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்!

Staff Writer

இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார். அவருக்கு வயது 77.

நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயபாரதி, அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று காலை 6 மணிக்கு காலமானார்.

கடந்த 1979 ஆம் ஆண்டு கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான படம் 'குடிசை'. இப்படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றது.

அதனைத்தொடர்ந்து, இவரது இயக்கத்தில் 'ஊமை ஜனங்கள்', 'ரெண்டும் ரெண்டும் அஞ்சு', உச்சி வெயில்', 'நண்பா நண்பா', 'குருஷேத்திரம்', 'புத்திரன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இந்த சூழலில், இயக்குநர் ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.