திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்துக்காக அமைச்சரிடமே கையூட்டு பெற்றதற்காக அர்ச்சகர் ஐயப்பன் ஐயர் தன்னார்வலர் எனும் நிலையிலிருந்து நீக்கப்பட்டார். அவரோடு இரு காவலாளிகளும் விடுவிக்கப்பட்டனர்.
மூவர் மீதும் வழக்கும் பதியப்பட்டுள்ள நிலையில், தி.மு.க.வின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அனிதா இராதாகிருஷ்ணன், அமைச்சர் இரமேஷ் எடுத்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தி.மு.க. தரப்பிலேயே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“அர்ச்சகரின் திரிசுதந்திரர் சாதியையே இழிவுபடுத்துவது இது” என்று அனிதா குறிப்பிட்டுள்ளார்.
அவரின் அறிக்கை இதோ!