திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் டிசம்பர் 18ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கழக உறுப்பினர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும் டிசம்பர் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.