உளவுப் பிரிவு காவல்துறைத் தலைவர் பால நாகதேவி, இணையக் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஒன்பது காவல்துறை உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உளவுத் துறை பாதுகாப்புப் பிரிவின் டிஐஜியாக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளகப் பாதுகாப்பு உளவு டி.ஐ.ஜி.யாக பி.சி. கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்புப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை எஸ்.பி.யாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.