மழை  
தமிழ் நாடு

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

Staff Writer

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது டிசம்பர் 12ஆம் தேதிக்கு மேல் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமானுக்கு தெற்கே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 12க்கு மேல் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் கடலூர் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.