உழைப்பவர்களை யாராலும் வீழ்த்த முடியாது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முறையில் தான் 45 ஆண்டுகாலம் என்னுடைய பணிகளை ஆற்றி வருகிறேன். என்னை பொறுத்தவரையிலும் இளவரசரை போல் என்றைக்கும் இருந்ததில்லை. எளிமையான வாழ்க்கை நடத்தி வருகின்றேன். அப்படி நடத்திய காரணத்தின் அடிப்படையில் தான் மூன்று முறை வாக்காளரை தேர்தல் களத்தில் வருகை தந்து வாக்கு கேட்காத காலத்திலே நீ எங்கள் வீட்டு பிள்ளை என்ற முறையில் அனைவரும் வாக்களித்து வெற்றி பெற்ற வரலாறு இந்த தொகுதியில் இருக்கிறது என்று கூறினார்.
இந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள். இந்த பகுதியை சார்ந்திருக்கிற வாக்காளர் பெருமக்கள், கழகத்தின் முன்னோடி பொறுப்பாளர்கள், நம்முடைய கூட்டணியை சார்ந்தவர். அதற்கு மேலும் கருத்துகள் சொல்வது சரியாக இருக்காது. நேற்றைய முன்தினம் தொடர்ந்து எனக்கு பல்வேறு சங்கங்கள் சார்பாக கடிதங்கள் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்தும் அளவிற்கு அந்த கடிதங்களில் இருக்கிறது.
அதில், உங்களுடைய தியாகத்தை பற்றி, உங்கள் உழைப்பை பற்றி, நீங்கள் செய்கின்ற சேவையைப் பற்றி, யாரும் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்ற முறையில் கருதுங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஏனென்று சொன்னால் உழைப்பவரை எவராலும் வீழ்த்த இயலாது. ஆகவேதான் உழைக்கின்ற இறைவன் புரட்சி தலைவர். அவர் எந்த சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை. மன்னிக்கின்ற தன்மை படைத்தவர். கஷ்டங்கள் வருகிற போது அந்த கஷ்டத்திலே தொண்டர்களுக்காக முன் நின்று தியாகத்தை செய்தவர்
அதே போல் தான் அம்மா ஜெயலலிதா அவர்களும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அன்றைய காலகட்டத்தில் தன்னிடம் உள்ள இயக்கத்தை காப்பதற்கு நகை பொருள் அனைத்தும் 1989இல் வழங்கிய இந்த இயக்கத்தை வலிமைப்படுத்தினார். அவரை பொறுத்தவரையிலும் மன்னிக்கின்ற உள்ளம். கருணை உள்ளம். தொண்டர்களை காப்பதற்கு என்ன நாம் உருவாக்க வேண்டுமோ, அதை மனதில் வைத்து தான் அந்த பணிகளை சீரோடும் சிறப்போடும் நடத்தினார். அந்த வழியில் நாங்களும் அந்த பயணங்களை மேற்கொண்டு வருகிறோம். என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.