முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் பயணித்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இன்று(அக். 30) அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்துள்ளனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஓபிஎஸ்ஸும் செங்கோட்டையனின் இந்த கருத்தை வரவேற்றிருந்தார். இதுதொடர்பாக செங்கோட்டையனை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இது அதிமுகவில் இரு தலைவர்களின் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.