தமிழ்நாடு மாநில 17வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இருக்கையில் அமர வைத்தனர்.
துணை சபாநாயகராக துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்து சட்டமன்றக் கட்சிக் குழுத் தலைவர்கள் பேசினர்.