அரசுப் பேருந்துகள் 
தமிழ் நாடு

முகூர்த்த நாள்- 885 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

Staff Writer

​இன்று (4-ம் தேதி) முகூர்த்த தின​ம், வார விடுமுறையை முன்னிட்டு சென்​னை​யில் இருந்து 885 பேருந்துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்துத் துறை அறி​வித்​துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

“  சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று 295 பேருந்​துகளும், நாளை 480 பேருந்​துகளும், 6-ம் தேதி சனிக்​கிழமை 495 பேருந்​துகளும், சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு ஜுன் 4, 5, 6 ஆகிய தேதி​களில் 55 பேருந்துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​திலிருந்து நாளை, நாளை மறு​நாள் 25 பேருந்​துகளும் மற்​றும் பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு, கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்து பல்​வேறு இடங்​களுக்கு 200 சிறப்பு பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இன்று 4,097 பயணி​களும், நாளை 8,541 பயணி​களும், சனிக்​கிழமை அன்று 4,972 பயணி​களும், மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை அன்று 10,079 பயணி​களும் பயணம் மேற்​கொள்ள முன்​ப​திவு செய்​துள்​ளனர். இடநெருக்கடியைத் தவிர்க்க TNSTC Official Website அல்லது redBus மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.” என்று போக்​கு​வரத்துத் துறையின் செய்​திக்குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram