மூத்த பத்திரிகையாளர் மானா பாஸ்கரன், இளம் எழுத்தாளர் நர்மதா தேவி உட்பட 33 பேர் எழுதிய நூல்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் நூல்களை வெளியிட்ட பதிப்பாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல்களுக்காக, நூலாசிரியருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பதிப்பகத்தாருக்கு 25 ஆயிரம் ரூபாயும் பரிசாக அளிக்கப்படுகிறது.
பல்வேறு மருத்துவ நூல்களின் எழுத்தாளரும் மூத்த மருத்துவருமான சு. நரேந்திரன் எழுதிய கலைச்சொல்லாக்க வரலாறும் வளர்ச்சியும், மூத்த பத்திரிகையாளர் மானா பாஸ்கரன் எழுதிய அணிநிழற்காடர் நம்மாழ்வார், நர்மதா தேவி எழுதிய பெண் அன்றும் இன்றும் ஆகிய நூல்கள் பரிசு பெற்றவற்றுள் அடங்கும்.
பரிசுப் பட்டியல் விவரம் :