உளறல்நிதியின் மற்றொரு நாள்; மற்றுமொரு உளறல் என்று உதயநிதியின் கருத்துக்கு விஜய்யின் த.வெ.க. ஐ.டி. அணி பதிலடி அளித்துள்ளது.
”ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து தாங்கள் செய்த ஒட்டகபேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும்.
புதிதாகத் தொடங்கியுள்ள சோபா, டேபிள், சேர், டீபாய் வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே சோபா மாடல் என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். தன் வியாபாரம் செல்ஃப் எடுக்காமல் சிதறிப் பதறுகிறார். தீவிரமாக விரக்தியைக் கொட்டுகிறார்.
தி.மு.க. கட்சிக்காரர்களும் மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி வாங்கிய நிதி எல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார்.
மூச்சுவிடக்கூட வசனத்தை நம்பி வாழும் இந்த ஸ்க்ரிப்ட்நிதி ஆட்சியைப் பிடிக்க மறைமுகமாகத் திட்டமிட்டுத் தொட்ட கதையும் தொடமுயன்று தோற்ற கதையும் அம்பலமாகுமோ என்று பதறுகிறார்.
பற்பல லிங்கங்களையும் பல்வேறு செல்வங்களையும் வெண்டிக் மெசினில் போட்டு வெளுத்த தி.மு.க.வை, மக்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெளுவெளுவென வெளுக்கப் போவது உறுதி.” என்று த.வெ.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.