சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன்
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் 
தமிழ் நாடு

வி.சி.க.வுக்குப் பானை சின்னம் - திருமா, ரவிக்குமாரே மீண்டும் போட்டி!

Staff Writer

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவது என அறிவித்திருந்தது. அதன்படி, அக்கட்சிக்கு ஏற்கெனவே போட்டியிட்ட பானை சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது. 

சென்னையில் சற்றுமுன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன் இதைத் தெரிவித்தார்.  

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் ஆறாவது முறையாக திருமாவளவன் போட்டியிடுகிறார். 

கடந்த 2014ஆம் ஆண்டு திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தோல்வியடைந்த வி.சி.க. பொதுச்செயலாளர் இரவிக்குமார், 2019 தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுவார் என திருமாவளவன் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார்.