மறைந்த முதுபெரும் தலைவர் நல்லகண்ணு விரும்பி, எழுதிவைத்துச் சென்றபடி அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தானமாக அளிக்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னை, இராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
இன்று மாலை 5 மணி முதல் அன்னாரின் உடலானது, இ. கம்யூ. கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான தியாகராயர் நகர், பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும்,
நாளை பிற்பகல் 3 மணியளவில் அங்கிருந்து கம்யூ. கட்சி தோழர்களின் அணிவகுப்போடு சென்னை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அதன் இராஜீவ்காந்தி மருத்துவமனையில் கையளிக்கப்படும் என்றும் வீரபாண்டியம் கூறினார்.