கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கிழக்கு மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பெ.சன்னியாசி என்பவர் மகன் சுரேஷ் (வயது 43).
நேற்று (08.01.2026) மாலை 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக அதே கிராம ஏரியில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.
துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சுரேஷ் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.