தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
”நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”கடைக்கோடி பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவுக் கரம் அளித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களையும், அவர்களுக்காக போராடிய ஜனநாயக சக்திகளையும் விடுவிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.” என்று செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.