சட்டப்பேரவை 
தமிழ் நாடு

விஜய் மீது உரிமைமீறல் புகார் அளித்த தி.மு.க.!

Staff Writer

முதலமைச்சர் விஜய் மீது சட்டப்பேரவை உரிமைமீறல் புகாரை தி.மு.க. அளித்துள்ளது. 

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் தி.மு.க. சார்பில் அதன் துணைக்கொறடா கோவி செழியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் இன்று மனுவை அளித்தனர்.  

அவையில் இல்லாதவர்களான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரைப் பற்றி பேசியது, நிலுவையில் உள்ள வழக்குகளைப் பற்றி பேசியது ஆகியவற்றுக்காக அவர்கள் இந்த மனுவை அளித்தனர்.