“தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் பகல் நேரத்தில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரம், பிப்ரவரி 18ஆம் தேதி வரை பெரும்பாலானப் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.