2025-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்தவகையில் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ் (அமெரிக்கா), பிரெட் ராம்ஸ்டெல் (அமெரிக்கா) மற்றும் ஷிமோன் சகாகுச்சி (ஜப்பான்) ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.