அன்புமணி 
செய்திகள்

மாவட்டம் மாவட்டமாகப் போகிறார் அன்புமணி... பொதுக்குழுக் கூட்டங்கள்!

Staff Writer

பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த  வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு தலைமை முடிவுசெய்திருக்கிறது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

”1. 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்


2. 15.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்


3. 16.06.2025 திங்கள் காலை 10.00 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்


4. 16.06.2025 திங்கள் மாலை 03.00 மணி -இராணிப்பேட்டை மாவட்டம்


5. 17.06.2025 செவ்வாய் காலை 10.00 மணி - வேலூர் மாவட்டம்


6. 17.06.2025 செவ்வாய் மாலை 03.00 மணி -திருப்பத்தூர் மாவட்டம்


7. 18.06.2025 புதன் காலை 10.00 மணி - திருவண்ணாமலை மாவட்டம்


8. 18.06.2025 புதன் மாலை 03.00 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்


9. 19.06.2025 வியாழன் காலை 10.00 மணி -சேலம் மாவட்டம்


10. 19.06.2025 வியாழன் மாலை 03.00 மணி -தருமபுரி  மாவட்டம்” என்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டங்களில் அன்புமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின்  மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.


மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.