டோலி சோகி
டோலி சோகி

அடுத்தடுத்து உயிரிழந்த டி.வி. சீரியல் சகோதரிகள்!

இந்தி டி.வி. சீரியல் நடிகைகளான டோலி சோகி, அமந்தீப் சோகி சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனக், களாஷ், ஹபி உட்பட்ட இந்திய டி.வி. சீரியல்களில் நடித்து பிரபலமானவர், டோலி சோகி. அவர், கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சீரியல்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார்.

டோலி சோகியின் சகோதரியான அமந்தீப் சோகியும் சீரியலில் நடித்து ’பெடமீஸ் டில்’ என்ற தொடர் மூலம் பிரபலமானார். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நோய்வாய்ப்பட்டிருந்த சகோதரிகள் இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில், அமந்தீப் சோகி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அவர் மரணமடைந்த அடுத்த சில மணி நேரங்களில், டோலி சோகியும் இன்று காலை 4 மணிக்கு உயிரிழந்தார்.

சின்னத்திரை சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், அவர்களின் ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com