மாமன்னன் திரைப்படத்தின் இடைவேளையில் திரையரங்கம் அதிரும் - தனுஷ்

தனுஷ் - மாரிசெல்வராஜ்
தனுஷ் - மாரிசெல்வராஜ்
Published on

மாமன்னன் திரைப்படத்தின் இடைவேளையின் போது திரையரங்கங்கள் அதிரும் என நடிகர் தனுஷ் புகழ்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் அப்படம் குறித்து புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாரிசெல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிகரமான திரைப்படம். மாரியை அணைத்துக்கொள்கிறேன். உதயநிதி மற்றும் வடிவேலு ஆகியோர் எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளனர். ஃபகத், கீர்த்தி சுரேஷ் தங்களின் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். இடைவேளையின்போது திரையரங்கங்கள் அதிரப்போகிறது. ரஹ்மான் சாரும் அழகான இசையை வழங்கியுள்ளார்.’ எனப் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com