பருத்திவீரன்: இந்த சீனெல்லாம் வேணாம்- ஞானவேலுக்கு சமுத்திரக்கனி காட்டம்!

பருத்திவீரன்: இந்த சீனெல்லாம் வேணாம்- ஞானவேலுக்கு சமுத்திரக்கனி காட்டம்!

பருத்திவீரன் பட விவகாரத்தில் அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவிப்பதாக வெளியிட்ட அறிக்கைக்கும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடாகவே பேசியுள்ளார்.

அதில், ” பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லா நீங்க செய்ய வேண்டியது.,

எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!

நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...!

அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...

அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்... அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க நீங்கதான், 'அம்பானி பேமிலியாச்சே..!"

காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி !” என்று சமுத்திரக்கனி குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com